Indhiya Arasiyal Amaipu


 

1. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் – “ராஷ்டிரபதி பவன்’ (குடியரசுத்தலைவர் மாளிகை).

2. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் – “ராஷ்டிரபதி பவன்’

3. புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது.

4. ராஷ்டிரபதி பவன் – நான்கு மாடிகள், 340 அறைகள் கொண்டது. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடி செங்கல், 30 கோடி கற்கள்

பயன்படுத்தப்பட்டுள்ளன.

5. குடியரசுத் தலைவர் மாளிகைக்கான செலவு 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாகும். அந்த காலத்திய இந்திய பண மதிப்பு ரூ.2 கோடி.

6. இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை – தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை.

7. 1911-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்படுகிறது என்று அறிவித்தவர் – ஜார்ஜ் மன்னன்.

8. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் – லார்டு இர்வின்(1931.ஜனவரி 23-ல் குடியேறினார்)

9. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர் – இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி.

10. பொதுத்தேர்தல் முடிந்த பின் புதியதாக கூடும் மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சாபாநாயகரை நியமிப்பது – குடியரசுத் தலைவர்

11. யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுகைக்கு உட்பட்டது – குடியரசுத் தலைவர்

12. இந்திய ஒரு “குடியரசு” (Republic) ஏனெனில் அதனுடைய அரசின் தலைவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மறைமுகமாக மக்களால்(அதாவது மக்களின் பிரதிநிதிகளால்)

தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

13. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் – டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்

14. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒவ்வொரு 6 மாதங்கள் காலக்கட்டத்திலும் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.

15. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகாமல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது.

16. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் – துணைக் குடியரசுத் தலைவர்

17. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில் சாதாரணமாக 3 வருடங்கள் நீடிக்கலாம்.

18. மக்களவையின் சபாநாயகராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்தவர் – சஞ்சீவி ரெட்டி

19. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினரை எக்காரணத்திற்காக குடியரசுத் தலைவர் நீக்கலாம் – 1. திவால் ஆனாவர் என்றால் 2. உறுப்பினராக

இருக்கும் காலகட்டத்தில், ஊதியத்திற்காக வேறு பணி புரிந்தால் 3. குடியரசுத் தலைவர், உறுப்பினரின் உள்ளம் மற்றும் உடலால் நலமில்லாதவர் என்று நினைத்தால் இவை

அனைத்திற்காகவும் நீக்கலாம்.

20. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்திய குடியரசுத் தலைவர் – டாக்டர் இராஜேந்திர பிரசாத்.

21. ராஷ்டிரபதி பவன் – இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது.

22. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள் – தற்போது வெளிநாட்டு

தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.

23. ராஷ்டிரபதி வளாகத்தில் – முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் தோட்டங்கள் அமைந்துள்ளன. 7. தில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய

இடங்களில் குடியரசுத் தலைவருக்கான “ராஷ்டிரபதி நிலையம்’ அமைந்துள்ளது.

24. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் – சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்.

25. அடிப்படை உரிமைகள் – குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்

26. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை – அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்

27. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – அரசியலமைப்பின் பகுதி IV

28. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வகைகள் – 47 வகைகள்

29. இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது – குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்

30. இந்திய உச்சநீதிமன்றம் – அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது

31. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் – நீதித்துறை

32. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன – 42வது அரசியலமைப்பு திருத்தம்

33. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது – அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது

34. இந்திய அரசியலமைப்பில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ள பகுதி –  அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள். 

 

இந்திய அரசியல் நிர்ணய சபை

1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் – டிசம்பர் 6, 1946

2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் – டிசம்பர் 9, 1946

3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் – தில்லி

4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது – காபினெட் தூதுக்குழுத் திட்டம்

5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் – டாக்டர் அம்பேத்கார்

6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் – டாக்டர் ராஜேந்திர பிரசாத்

7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் – டாக்டர் சச்சிதானந்த சின்கா

8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் – டாக்டர் இராஜேந்திர பிரசாத்

9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை – 385 + 4

10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை – 299

11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது – இங்கிலாந்து

12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது – 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்

13. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை – 22

14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை – எட்டு

15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை – 24

16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் – ஆகஸ்ட் 15, 1947

17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் – ஜவகர்லால் நேரு

18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் – டாக்டர் இராஜேந்திர பிரசாத்

19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் – முகவுரை

20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் – 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்

21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் – சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு

22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை – 395

23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை – 450

24. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை – 12

25. அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி – அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)

26. உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு – இந்திய அரசியலமைப்பு

27. இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் – எம்.என்.ராய்

28. இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் – ஜனவரி 26, 1950

29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் – நவம்பர் 26, 1949

30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் – பாரத்

31. தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை – 10

32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – ரஷ்யா

33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – அமெரிக்கா

34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது – தென் அமெரிக்கா

35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – இங்கிலாந்து

36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது – கனடா

37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் – முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் – பி.என்.ராவ்

39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் – ஜனவரி 22, 1947

40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் – ஜவகர்லால் நேரு

41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – ரஷ்யா

42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு – 1976 (42வது திருத்தம்)

43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – அமெரிக்கா

44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – அமெரிக்கா

45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – இங்கிலாந்து

46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – இங்கிலாந்து

47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – இங்கிலாந்து

48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – அமெரிக்கா

49. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள் – ஜூலை 22, 1947

50. ஒன்றிய நிர்வாகம் பற்றிய பகுதி – பகுதி 5

51. மாநில நிர்வாகம் பற்ரிய பகுதி – பகுதி 6

52. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக பணியாற்றிய டாக்டர் சச்சிதானந்த சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

53. நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது – அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

54. ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள் பற்றி குறிப்பிடுவது – பகுதி -1

55. குடியுரிமை பற்றிக் குறிப்பிடுவது – பகுதி -2

56. அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடுவது – பகுதி -3

57. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது – பகுதி -4

58. ஒன்றியம் (யூனியன்) பற்றிக் குறிப்பிடுவது – பகுதி -5

59. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது – பகுதி -6

60. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது – பகுதி-8

61. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது – பகுதி -9

62. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது – பகுதி -9 A

63. அவசரகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது – பகுதி -18

64. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது – பகுதி -20

65. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து – ஷரத்து 1

66. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை – 9வது அட்டவணை

67. 52வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை – 10வது அட்டவணை

68. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு – 1985

69. முதல் திருத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை – 9வது அட்டவணை

70. 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அட்டவணை – 9வது அட்டவணை

71. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புக்கள் குறித்து குறிப்பிடும் அட்டவணை – 11வது அட்டவணை

72. நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை – 12வது அட்டவணை

73. 1993ல் 74வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை – 12வது அட்டவணை

74. 1992ல் 73வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -11வது அட்டவணை

75. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை – 10வது அட்டவணை

76. நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை – 18

77. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை – 29

78. மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1955

79. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1955

80. 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள் – மூன்று

81. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது – ஷரத்து 14

82. குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை – ஐந்து

83. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1955

84. சாதி, சமயம், இநம், பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக்கூடாது என்று குறிப்பிடுவது – ஷரத்து 15

85. பதிவு முறை மூலம் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் – 5 ஆண்டுகள்

86. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு பாராளுமன்றம்

87. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து – ஷரத்து 17

88. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது – ஷரத்து 16

89. சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து – ஷரத்து 18

90. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து – ஷரத்து 19

91. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது – ஷரத்து 21

92. கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது – ஷரத்து 23

93. 14 வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக் கூடாது என்று குறிப்பிடுவது – ஷரத்து 24

94. சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது – ஷரத்து 23 மற்றும் 24

95. சமத்துவ உரிமை என்பது ஷரத்து – 14 முதல் 18 வரை

96. சுதந்திர உரிமை என்பது – ஷரத்து 19 முதல் 22 வரை

97. சமய உரிமை என்பது – ஷரத்து 25 முதல் 28 வரை

98. கல்வி மற்றும் கலாசார உரிமை என்பது – ஷரத்து 29 மற்றும் 30

100. ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை – ஐந்து

 

Thanks n Regards

Jeevanandam K

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s