இந்திய அரசியலமைப்பு


இந்திய அரசியலமைப்பு (இந்தி; भारतीय़ संविधान, Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். எழுதப்பட்ட சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சி மற்றும் ஒருமுகத்தன்மை கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது இந்திய அரசியலமைப்பாகும்.அது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள்,மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 450 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட,குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியாபொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி(federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘கூட்டாட்சி’ (கூட்டரசு – federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக ‘ஒன்றியம்’ (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், ” இறையான்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு” என்றும் ” இந்திய யூனியன்” என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் ஒரு முழுப் புரிதலையும் தரும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் ‘அடிப்படை உரிமைகளும்’ அடங்கும்.

 

இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு

இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழுமார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல் நிர்ணய சபை கூடியது. அச்சபையின் தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பனியை அரசியல் நிர்ணய சபை செய்ய வேண்டியதாயிற்று.

 

அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு

1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee)உருவாக்கப்பட்டது.

1. பீ. இரா. அம்பேத்கர்

2. கோபால்சாமி ஐயங்கார்

3. அல்லாடி கிருஷ்ணமூர்த்தி

4. கே.எம். முன்ஷி

5. சையது முகமது சாதுல்லா

6. மாதவராவ்

7. டி. பி. கைதான்

ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இக்குழுவில் இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948,பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபைக்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949, ஜனவர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத்தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930,ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானர் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. “இந்திய அரசியலமைச் சட்டம்-1950” இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.

இது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதன் விடுதலைக்கு பிறகு இந்திய அரசின் நில சட்டத்தின் ஸ்தாபக கொள்கைகளை கொண்டிருந்தது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது.

 

இந்திய அரசியலமைப்பின் கூறுகள்

இந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 9 அட்டவணைகளும்(Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (article)களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், மத்திய நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்பட்டுள்ளது.

 

அடிப்படை உரிமைகள்

இந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை(Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்லது. 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:

1. இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு(பிரிவு-14)

2. வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம்(பிரிவு-15)

3. பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு(பிரிவு-16)

4. தீண்டாமை ஒழிப்பு(பிரிவு-17)

5. பட்டங்கள் ஒழிப்பு(பிரிவு-18)

6. ஏழு சுதந்திரங்கள்(பிரிவு-19 முதல் 22)

7. சமய உரிமை(பிரிவு 25-28)

8. கல்வி உரிமை(பிரிவு 29)

9. இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)

ஆகியன முக்கியமனவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமுலாகிவிடும்.

 

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

இந்தியாவிலுள்ல மத்திய மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி சட்டஙக்ள் இயற்ற வேண்டும் என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்(Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோரும் போதுமான வழ்க்கை வசதிகள், வயதுக்கும் வேலைக்கு ஏற்ற பொருத்தமான வேலை, தொழில் செய்ய ஏற்ற சூழ்நிலை, வேலைக்கு ஏற்ற வயது வரை இலவச கட்டாயக் கல்வி, பொது சுகாதாரம், மது விலக்கு, வேளாண்மை வளர்ச்சி, வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியன அக்கோட்பாடுகளுள் சிலவாகும்.

இக்கோட்பாடுகள் யாவும் அறிவுரைகளேஇவற்றைச் செயல்படுத்தக் கோரி அரசுகள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.

 

மத்திய நிர்வாகக் குழு

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மத்திய அமைச்சரவை, பாராளுமன்றம் ஆகியவற்றைக் கொண்டதாக மத்திய நிர்வாகக் குழு அமையும்.

 

குடியரசுத் தலைவர் (President of India)

இந்தியக் குடியரசுத் தலைவர்என்பவர் இந்தியக் குடியரசு எனப்பட்ட “இந்திய அரசின் தலைவர்” ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். ‘இந்தியாவின் முதல் குடிமகன்’ என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.

குடியரசுத் துணைத் தலைவர்

மத்திய அமைச்சரவை

பாராளுமன்றம்

மாநிலங்களவை

மக்களவை

 

மாநில அரசுகள்

1935 முன்பானபிரித்தானியநாடாளுமன்றத்தின்சட்டங்கள்

அச்சட்டம் மேலும் இங்கிலாந்தில் இந்திய மாநில செயலாளர் அலுவலகத்தை நிறுவி நாடாளுமன்றம், அதன் மூலம் ஆட்சி செய்தது. அதே போல் இந்திய அரச பிரதிநிதி அலுவலகத்தை நிறுவியது. நிருவாகச் சபை மற்றும் அல்லாத அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையியை இந்திய சபைகள் சட்டம், 1861 வழங்கியது.இந்திய சபைகள் சட்டம், 1892 மாகாண சட்டமன்றங்களை நிறுவியது மற்றும் சட்ட சபையின் அதிகாரங்களை அதிகரித்தது. இந்த சட்டங்களால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்த போதிலும், அவர்களின் அதிகாரம் குறைவாகத் தான் இருந்தது. இந்திய சபைகள் சட்டம், 1909 மற்றும் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆகியவற்றால் இந்தியர்களின் பங்கு மேலும் விரிவடைந்தது.

 

இந்தியஅரசுச்சட்டம் 1935

இந்திய அரசு சட்டம் 1935 யின் விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை ,எனினும் இந்திய அரசியலமைப்பில் ஒரு பெரும் தாக்கத்தை ஏர்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின் பல முக்கிய அம்சங்கள் நேரடியாக இந்த சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டன. கூட்டாட்சி அரசாங்கம் அமைப்பு, மாகாண சுயாட்சி, கூட்டாட்சி சட்டமன்றம் மற்றும் சட்ட அதிகாரங்களை மத்தியிலும் மாகாணங்களின் இடையிலும் பிரித்தல் ஆகியவற்றை தற்போது இந்திய அரசியலமைப்பு அவை சட்டத்தின் விதிகளில் இருந்து எடுத்துக்கொண்டது.

கேபினெட்டுமிஷன்திட்டம்

1946 இல், பிரித்தானியப் பிரதமர் கிளெமென்ட் அட்லி அதிகாரத்தை பிரித்தானிய இந்தியாவிடமிருந்து இந்திய தலைமைக்கு மாற்ற விவாதித்து முடிவு செய்யவும்,காமன்வெல்த்து நாடுகளின் ஒரு அங்கமாக இந்தியாவை மேலாட்சி அரசுமுறையின் கீழ் சுதந்திரம் வழங்க ஒரு அமைச்சரவைக் குழுவை உருவாக்கினார். இக்குழு கேபினட்டு மிஷன் என அழைக்கப்பட்டது.

பிரித்தானிய இந்திய மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருந்த 296 இடங்களுக்கான தேர்தல் ஆகத்து 1946 இல் நிறைவு பெற்றது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்திசம்பர் 9, 1946 அன்று முதல் கூடி புதிய அரசமைப்பை உருவாக்கும் வேலையைத் தொடங்கியது.

இந்தியசுதந்திரசட்டம் 1947

சூலை 18, 1947 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலை (சுதந்திர)ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது இரண்டு புதிய சுதந்திர மேலாட்சி நாடுகளான – இந்தியாமற்றும் பாக்கிஸ்தான் என்று பிரித்தானிய இந்தியாவைப் பிரித்து அவர்கள் தங்களின் ஒரு புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதபடும் வரை, காமன்வெல்த் நாடுகள் கீழ் இருக்க வேண்டும் என்றது. தனி மாநிலங்களுக்காக அரசமைப்பு சபை இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு புதிய சட்டமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்கள் வழங்கப்பட்டது. சட்டம் மேலும் மற்ற மன்னர் ஆளும் மாநிலங்களை ஏதாவது ஒன்றின் அடியே இணையச் சொன்னது.இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு சனவரி 26 அன்று வழக்குக்கு வந்த போது இந்திய விடுதலலச் சட்டம் நீக்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுப்பட்டு இறையாண்மை கொண்ட மக்களளட்சிக் குடியரசாக மாறியது. 26நவம்பர், 1949 தேசிய சட்டம் தினம் என்று அறியப்படுகின்றது.

 

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

மத்திய மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. .ஜவகர்லால் நேரு, சி ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சன்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் சில முக்கிய பிரமுகர்களாக இருந்தன. தாழ்த்தபட்ட வகுப்புகளை சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தன. பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தர். மற்றும் பார்சிஇனத்தவர்களை ஹெச்பி மோடி பிரதிநிதித்துவம் கொன்டிருந்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக,ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர Cஊமர் Mஊகெர்ஜீ என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர் இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். ஆல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர், பெனகல் நர்சிங்க் ராவ் மற்றும் கி.மீ. முன்ஷி,கனேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு சபையின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா ​​இருந்ததார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு சபை உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.

 

வரைவு

சட்டமன்றத்தின் 14 ஆகஸ்ட் 1947 கூட்டத்தில், பல்வேறு குழுக்களை உருவாக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்டது. அத்தகைய குழுக்களில் அடிப்படை உரிமைகள், யூனியன் நாடுகள் குழு மற்றும் மத்திய அரசியல் குழு அடங்கியிருந்தன. 29 ஆகஸ்ட் 1947 அன்று, வரைவு குழு,தலைவரை டாக்டர் அம்பேத்கராக கொண்டு மற்றும் ஆறு உறுப்பினர்கள் இணைந்து நியமிக்கப்பட்டது. ஒரு வரைவு அரசியலமைப்பு தயாரிக்க பட்டு 4 நவம்பர், 1947 அன்று சட்டமன்ற குழுவிடம் சமர்பித்தது. இந்திய அரசியலமைப்பை உறுவாக்கியவர்கள் , பல வெளிப்புற ஆதாரங்களை தழுவினாலும் , மிக அதிக அளவில் பிரிட்டிஷ் முறையான பாராளுமன்ற ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்டனர். கூடுதலாக பல கொள்கைகளை அமரிக்க அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன . அரசாங்கத்தின் முக்கிய கிளைகள் மத்தியில் அதிகார பிரிப்பு, ஒரு உச்ச நீதிமன்ற நடைமுறை, மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பு ஆகிய கொள்கைகள் அடங்கும். சட்டமன்ற அரசியலமைப்பு தத்தெடுக்கும் முன்னதாக 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் முழுவதும் கொண்ட மொத்தம் 166 நாட்கள், பொது திறந்த அமர்வுகளில் சந்தித்தது. சில மாற்றங்களுக்கு பிறகு, சட்டமன்றத்தின் 308 உறுப்பினர்களும் இரண்டு ஒப்பந்ததிலும் (இந்தி மற்றும் ஆங்கிலம்)24 ஜனவரி,1950 அன்று கையெழுத்து இட்டனர். இந்தியாவின் உண்மையான அரசியலமைப்பு கையால் எழுதப்பட்டு,பியூகார் ராம்மனோஹர் சின்ஹா ​​மற்றும் மற்றவர்கள் உட்பட சாந்திநிகேதன் கலைஞர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின்னர், 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு இந்திய அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் சட்டம் ஆனது.

அரசியலமைப்பு அதன் அரங்கேற்றம் முதல் பல திருத்தங்களை பெற்றுவிட்டது.

அமைப்பு

அரசியல், அதன் தற்போதைய வடிவத்தில் (மார்ச்,2011), ஒரு முன்னுரை, 450 கட்டுரைகள், 12 அட்டவணை, 2 பின் இணைப்பு மற்றும் 114 திருத்தங்களை இன்றுவரை கொண்டு மொத்தம் 24 பகுதிகளை கொண்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவம் கொன்டது எண்றாலும் ஒரு வலுவான ஒற்றை சார்பு கொண்டிருக்கிறது.

 

அரசாங்கத்தின்அமைப்பு

பின்வருமாறு மத்திய அரசு அடிப்படை வடிவம் எதிர்நோக்குகிரது

“ஒரு ஜனநாயக நிர்வாகம் மூன்று நிலைகளை தீர்க்க வேண்டும்: 1. ஒரு நிலையான நிர்வாகம் இருக்க வேண்டும் 2. ஒரு பொறுப்பான நிர்வாகம் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அது சம அளவு இரண்டு நிலைமைகளையும் உறுதி செய்ய ஒரு முறையை திட்டமிடுவது இதுவரை சாத்தியமே இல்லை. ….. அமெரிக்க முறையில் இல்லாத தினசரி பொறுப்பு மதிப்பீடு குறித்த காலத்து மதிப்பீட்டை விட மிகவும் பயனுள்ளதக இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பயனுள்ளதாக அமையும். வரைவு அரசியமைப்பு நிலைத்தன்மையைவிட பொறுப்புக்கு விருப்பமாக பாராளுமன்ற அமைப்புக்கு பரிந்துரைத்துள்ளது. ”

 

 

கூட்டாட்சிஅமைப்பு

அரசியலமைப்பு மத்தியில் மற்றும் மாநிலங்கள் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் சக்திகளை மூன்று பட்டியல்,அதாவது மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியலில் என பிரிக்கிறது.தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விஷயங்கள் யூனியன் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன.பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலம் பட்டியல் உள்ளன. பாராளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் யூனியன் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான ராஜ்ய சபா,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

 

பாராளுமன்றஜனநாயகம்

இந்திய ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் நேரடியாக மக்களால் கிடையாது.ஜனாதிபதி மாநில தலைவர் உள்ளார் மற்றும் பாராளுமன்றத்தில் இயற்றப்படும் நிர்வாகம் மற்றும் சட்டங்கள் அனைத்தும் அவர் பெயரில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த அதிகாரங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன, ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும்.

இதே போன்ற ஒரு அமைப்பு, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தும் முறை தற்போது மாநிலங்களில் உள்ளது.

சுதந்திரமானநீதித்துறை

இந்திய நீதித்துறை நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும். நீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது, மற்றும் இரு மாநிலங்கள், அல்லது ஒரு மாநிலம் மற்றும் யூனியன் இடையே பிரச்சினைகளிள் ஒரு நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டு உள்ளது, மற்றும் அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பிலல்லாததாக அறிவிக்க முடியும்.

 

அரசியலமைப்பை மாற்ற

 

அரசியல் சட்ட திருத்தங்கள் கட்டுரை 368 அமைக்கப்பட்டுள்ள செயல்முறை படி , பாராளுமன்றம் மாற்றம் செய்யல்லாம். ஒரு திருத்த மசோதா மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும்.மேலும் கூட்டாட்சி அரசியலமைப்பு தொடர்புடையதான சில திருத்தங்களை மாநில சட்டமன்றங்கள் பெரும்பான்மை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். செப்டம்பர் 2010 வரை,பாராளுமன்றம் முன் செலுத்ப்பட்ட 108 திருத்த மசோதாக்களில் 94 திருத்தம் சட்டம் ஆக நிறைவேறி உள்ளது.எனினும், அரசியலமைப்பு அரசாங்க அதிகாரங்களை மிகவும் கவனிப்பதால் இந்த பிரச்சினைகளில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இதன் விளைவாக, ஆவணம் ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு முறை திருத்தப்பட்ட உள்ளது.

 

சட்டங்களின் நீதிமுறை மேலாய்வு

நீதிமுறை மேலாய்வு அமெரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து இந்திய அரசியலமைப்பு பயன்படுத்திக்கொண்டது. நீதிமன்ற உறுப்புரை 13 கீழ் நீதிமுறை மேலாய்வு செயல்படுகிறது.நீதிமன்ற அரசியலமைப்பு நாட்டின் உச்ச சக்தி மற்றும் அனைத்து சட்டங்களும் அதன் மேலாதிக்கத்தின் கீழ் என்பதை குறிக்கிறது. உறுப்புரை 13 கூறுவதாவது,

1. அனைத்து முன் அரசியலமைப்பு சட்டங்களும் பின்னர் அரசியலமைப்பு சட்ட விதிகளுடன் மோதல்கள் ஏற்பட்டால், அரசியலமைப்பின் விதிகள் அதற்கு ஏற்றதாக மாற்றப்படும் வரை செயல்படுத்த படாமல் இருக்கும்.இது டாற்றின் ஆப் எலிப்ஸ் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. 2. இதே முறையில், அரசமைப்பு சபையால் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டதிலிருந்து இயற்றபடும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு இணக்கத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், இல்லையெனில் சட்டங்கள் மற்றும் திருத்தங்களை வய்டு-அ பி- இனிடியோ வேண்டும் என கருதப்படுகிறது.

 

பகுதிகள்

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 5 ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.

பகுதி 6 (உட்பிரிவு 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.

பகுதி 6( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.

பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 10 உட்பிரிவு 244) பழங்குடியினர் பகுதிகள் குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 12( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.

பகுதி 13( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்

பகுதி 14 (உட்பிரிவு 324ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.

பகுதி 16 (உட்பிரிவு 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.

பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்

பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.

 அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக்கூடிய

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியது சென்னை ஐகோர்ட்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி பெருமிதம்

கருத்துகள்

 On Eating Out

 

சென்னை: சமூக அமைதியை கெடுத்துவரும் சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகளாகவும், மூத்த வக்கீல்களாகவும் உள்ளவர்களின் அமைப்பான செலக்ட் 75 சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது விழா நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், இப்ராஹிம் கலிபுல்லா, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.முருகேசன், நீதிபதிகள் ஜோதிமணி, சித்ரா வெங்கட்ராம், நாகமுத்து, மூத்த வக்கீல்கள் கே.பராசரன், கே.கே.வேணுகோபால், நாகேஷ்வரராவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி சதாசிவம் பேசியதாவது: சென்னை உயர் நீதிமன்றம் இந்திய நீதிமன்றங்களில் மிகவும் சிறப்பான அந்தஸ்தை பெற்றுள்ளது. லண்டன் நீதிமன்றங்களுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகவும் அதிக கட்டிடங்களை கொண்ட நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.

உயர் நீதிமன்ற வளாகத்திலேயே மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள ஒரே உயர் நீதிமன்றம் இதுதான். இந்திய அளவில் அதிக எண்ணிக்கையிலான வழக்கு களை விசாரித்து தீர்ப்பளித்து நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்துள்ள நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றம்தான். மாலை நேர நீதிமன்றங்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி அதன்மூலம் ஆயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. 2005ல் சமரச தீர்வு மையம் நாட்டிலேயே முதன்முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் உருவாக்கப்பட்டது. இங்குள்ள சம ரச தீர்வாளர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள சமரச மையங்களுக்கு சென்று வழக்குகளை தீர்ப்பது குறித்து பயிற்சி அளித்துள்ளனர்.

முக்கிய தீர்ப்பு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய வகையிலான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத் தில் நடத்தப்பட்டுள்ளன. சம்பாக்கம் துரை ராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப் பின் அடிப்படையில்தான் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் இடஒதுக்கீடு முறையே கொண்டு வரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் தொடரப்பட்ட அப்பீல் தள்ளுபடி செய்யப்பட் டது.  அதன்பிறகே அரசியலமைப்பில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது.

50% இடஒதுக்கீடு
இதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில்தான் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை 50 சதவீதமாக்கப்பட்டது. இந்திய அரசியமைப்பு சட்டத்தில் 76வது பிரிவில் திருத்தம் செய்ய இந்த தீர்ப்பே காரணமாக அமைந்தது.

குவாரி உரிமம்
குவாரிகள் உரிமம் தொடர்பான விதிமுறை யில் உரிமத்தின் காலம் 10 ஆண்டுகள் என்று வரையறுத்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்தான். குழந்தை தொழிலாளர் மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டுவருவதற்கான உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம்தான் பிறப்பித்தது. நாட்டு மக்களுக்கு அரசுகளின் செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிவிப்பதற்காகத்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு பணிகள் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்ற நோக்கமே இதற்கு காரணம். இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெற்று தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அசாம் மாநிலத்தில் ஏழை மக்களுக்கு பொது வினியோக திட்டத்தின்கீழ் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்ததையும் மறந்துவிடக்கூடாது.  தகவல் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதே நேரத்தில் சைபர் குற்றங்களும் அதிகரித்துவிட்டன.  உலகின் பயங்கரவாத அமைப்புகள் இன்டர்நெட் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைத்தான் முக்கிய ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இதுபோன்ற குற்றங்களை தடுத்து தனிமனித உரிமையையும் தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த நீதித்துறை முன்வர வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் இந்த பணிகளை செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு சதாசிவம் பேசினார்.

 Thanks n Regards

Jeevanandam K

Leave a comment